- Get link
- Other Apps
இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் !
அல்லாஹ்வின் திருபெயரால் ...
''இறை நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் . ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் ! அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி {எதிரி }யாவான் ."
அல்குர் ஆன் [2.208}
"அவன் {ஷைத்தான் }உங்களுக்கு தீமையையும் , வெட்கக் கேடானதையும் , நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் தூண்டுகிறான் ".
அல்குர் ஆன் .2.169}
மேற்கூறப்பட்ட இறைவசனங்களை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம் .இவை "இஸ்லாம் " அல்லாத மற்ற சமுதாய மக்களுக்கு இடப்பட்ட கட்டளைகள் அல்ல. மாறாக இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு இடப்பட்ட கட்டளைகளாகும் ."இறை நம்பிக்கை கொண்டோரே " என்று அல்லாஹ் அழைப்பதிலிருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம் .
தொழுகை , நோன்பு , ஜகாத், ஹஜ் போன்ற ஆன்மிக வணக்க வழிபாடுகளை மட்டுமின்றி திருமணம் , வியாபாரம் , கொடுக்கல்-வாங்கல் , தொழில் , சாப்பிடுதல் ,குளித்தல், மல-ஜலம் கழித்தல் ,அரசியல் போன்ற உலக விஷயங்கள் குறித்தும் , அவற்றில் பேண வேண்டிய ஒழுக்கங்கள் , கட்டுபாடுகள், தவிர்க்க வேண்டிய மூட நம்பிக்கைகள் குறித்தும் "இஸ்லாம் " தெளிவுபடுத்தியுள்ளது . ' நாகரிகம் " என்ற பெயரிலே "அநாகரீகமான கலாச்சாரங்கள் " உலகலாவிய அளவிற்கு காணப்படுகின்றன .ஆனால் இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ள கலாச்சாரம் " எளிமையாகவும் , எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையிலும் , நாகரீகமாகவும் , மக்கள் சமூகத்திற்கு பாதுகாப்பு கவசமாகவும் அமைந்துள்ளது.
பதினைந்து நூற்றாண்டுகளை கடந்தும் எவ்வித மாற்றமும் இன்றி எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் அளவிற்கு அது அமைக்கப்பட்டுள்ளது . இன்னும் உலகம் அழியும் வரையிலும் எவ்வித மாற்றமும் அதற்க்கு தேவைப்படவே செய்யாது . காரணம் ,அக்கலாச்சாரம் அல்லாஹ்வினாலும் , அவனது இறுதித் தூதர் அண்ணல் நபி {ஸல் } அவர்களினாலும் வடிவமைக்கப்பட்டதாகும் .
ஆனால், "இஸ்லாமிய கலாச்சாரம் " அல்லாத மற்ற கலாச்சாரங்களினால் ஆபத்துகளும் , விபத்துகளும் , சமூக சீரழிவுகளும், வெட்கங் கெட்ட காரியங்களும் ஒவ்வொருநாளும் நடைபெறுவதை காணமுடிகிறது .
ஷைத்தானின் அடிச்சுவடுகளே
முன்னேற்றத்தின் பால் அழைத்துச் செல்லாத , அழிவின் பால் ,இழிவின் பால் அழைத்துச் செல்கின்ற , அறிவுக்குப் பொருந்தாத ,நடை முறைக்கு சாத்திய மற்ற எந்த கலாச்சாரமாக இருப்பினும் அவையாவுமே ஷைத்தானின் அடிச்சுவடுகள் தான் .
"யார் மாற்றுமத கலாச்சாரத்தை {ஏற்று நடப்பதின் மூலம் } அதற்க்கு ஒப்பாகி விட்டானோ அவன் அந்த {மாற்று} மதத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான்' என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
மூடநம்பிக்கை கிடையாது.
இஸ்லாத்தில் சாத்திரங்கள் இல்லை.சம்பிரதாயங்கள் இல்லை. மூடநம்பிக்கை இல்லை. யாருக்கும் ,எப்பொழுதும் நம்மால் முடிந்த எந்த ஒரு நல்ல உதவியும் செய்வதற்கு நேரங்களோ, கிழமைகளோ , நாட்களோ கிடையாது .
"தன் சகோதரனுக்கு {பிறருக்கு} உதவி செய்யும் காலமெல்லாம் {உதவி செய்பவனுக்கு ] அல்லாஹ் உதவி செய்து கொண்டே இருக்கிறான்.
அறிவிப்பாளர் . ஹஜ்ரத் அபூஹுரைரா {ரலி} அவர்கள் .
ஆதாரம் /புஹாரீ }
முஸ்லிம்களில் சிலர் , "தாங்கள் சத்திய மார்க்கத்தில் இருக்கிறோம் " என்பதை உணராமல் அல்லது இஸ்லாமிய சட்டதிட்டங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமல் "சடங்கு,சம்பிரதாயம் ,சாத்திரம் , மூடநம்பிக்கை " போன்றவற்றில் மூழ்கிக் கிடப்பதை காண முடிகிறது . அதிலிருந்து அவர்கள் விலகி கொள்ள வேண்டும் . இல்லையேல் இஸ்லாம் அவர்களை கழன்று சென்று விடும் .
மறுமையை மறுப்போர் .
மறுமைநாளை, அதன் சோதனைகளை மறுப்போர் யார் ? என்பதை அல்குர் ஆன் பல இடங்களில் கூறியுள்ளது . அவர்களின் அடையாளங்களில் சிலவற்றை அல்லாஹ் கூறியுள்ளான் .
"தீர்ப்பு {மறுமை } நாளை பொய்யெனக் கருதியவனை பார்த்தீரா ? அவனே அனாதைகளை விரட்டுகிறான் . ஏழைகளுக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோர்க்கு கேடுதான் . அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகத் தொழுகின்றனர் . அற்பமானதையும் {கொடுக்க} மறுகின்றனர் ."
அல்குர் ஆன் /107/1-7}
அற்பமானவை ?
107 வது அத்தியாயத்தில் ஏழாவது வசனத்தில் "அற்பமானதையும் கொடுக்க மறுகின்றனர் " என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான் . ஏன் மறுகின்றனர் ? மறுபதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா ? என்றால் அப்படி ஓர் ஆதாரமும் இஸ்லாத்தில் சத்தியமாக கிடையாது. பிறகு ஏன் மறுக்க வேண்டும் ? மாற்றுமத சகோதரர்களில் சிலர் " கொடுக்க கூடாது " என்று மறுகின்றனர் . சாத்திரம் பார்கின்றனர் . எனவே , நாங்களும் கொடுக்க மாட்டோம் என்று ஒரு சில முஸ்லிம்கள் சாத்திரம் பார்ப்பதை காண முடிகிறது.
அற்பமானவை ' என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன .
*அல்லாஹ்வை வணங்குவதில் குறை வைப்பர் .
*மனித சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் குறை வைப்பர் .
*சாதாரண தேவைகளுக்கான பொருட்களை கூட கொடுக்க மாட்டார்கள்.
உதாரணமாக *
"மக்ரிப் " நேரம் {இரவின் ஆரம்ப நேரம் } வந்துவிட்டால் , இருட்ட ஆரம்பித்துவிட்டால் , "கத்தி , வாளி , தராசு , தண்ணீர் உப்பு , நெருப்பு , தீப்பெட்டி , ஊசி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பிறருக்கு கொடுக்க மாட்டார்கள் . கேட்டால் " அது தரித்திரம் " என்று சொல்வார்கள். ஆனால் இது சமந்தமாக நம்முடைய ஆன்மிக தலைவர் அண்ணல் நபி {ஸல்} அவர்கள் என்ன கூறுகிறார்கள் ? என்பதை காணுவோம் .
ஹஜ்ரத் ஆயிஷா {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் கேட்டார்கள் .
அல்லாஹ்வின் தூதரே ! பிறர் கேட்டு எதனை நாங்கள் மறுக்காமல் கொடுக்க வேண்டும் " ?
தண்ணீர், உப்பு , நெருப்பு ".
"அல்லாஹ்வின் தூதரே ! தண்ணீர் {சரி தான் } அது தாகத்தை தணிக்கும் . நெருப்பு, உப்பு ஏன் ?
''ஹூமைராவே ! {ஆயிஷா {ரலி} யின் பட்டபெயர் } ஒருவன் நெருப்பு கொடுப்பானேயானால் அந்த நெருப்பின் வாயிலாக எவ்வளவு உணவு தயாரிக்கப்படுமோ அவை அனைத்தையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்த நன்மையை பெறுவான் . ஒருவன் உப்பை கொடுப்பானேயானால் அந்த உப்பின் வாயிலாக எவ்வளவு உணவு ருசியாக்கப்படுகிறதோ அவை அனைத்தையும் தர்மம் செய்த நன்மையை அவன் பெறுவான் .தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பருவத்தில் ஒருவரின் தாகத்தை தீர்க்க தண்ணீர் கொடுத்தால் அறுபது அடிமைகளை உரிமை விட்ட நன்மையும் , தண்ணீர் பஞ்சமான காலத்தில் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தால் ஒரு மனித உயிரை காப்பாற்றிய நன்மையும் வழங்கப்படுவான் .
விதவைகளை கண்டால் *
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் மூடநம்பிக்கைகளின் பட்டியல் ................
Comments
Post a Comment